என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு
Byமாலை மலர்23 Sep 2017 10:18 AM GMT (Updated: 23 Sep 2017 10:18 AM GMT)
இந்திய தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகித்துவந்த தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி காலியானது.
அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி அரவிந்த் சுப்ரமணியன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். இவர் அலகாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையின் முதன்மை எழுத்தாளரான, அவரது பதவிக்காலம் வருகிற அக்டோபர் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X