என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்துக்கு திரும்ப அனுமதி தாருங்கள்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் கெஞ்சல்
Byமாலை மலர்23 Sep 2017 6:53 AM GMT (Updated: 23 Sep 2017 6:53 AM GMT)
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களை தமிழகத்துக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி தவிர 16 பேர் கர்நாடக மாநிலம் குடகு விடுதியில் தங்கி உள்ளனர்.
அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் கலைச் செல்வன், ரத்தினசபாபதி ஆகியோரும் தங்கி உள்ளனர்.இவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி உள்ளனர். அனைவரும் தங்களை தமிழகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று நேற்று குடகு விடுதிக்கு வந்த அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வருகிற 4-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை இங்கு தங்கி இருங்கள் என்று அவர்களிடம் தினகரன் கூறியதாக தெரிகிறது. இது குறித்து தங்க செல்வனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அடைந்ததால்தான் தினகரன் உங்களை சந்திக்க வந்து உள்ளாரா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளித்து தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:-
தினகரன் வராவிட்டால் ஏன் வரவில்லை என்று கேட்கிறீர்கள். வந்தால் இப்படி கேட்கிறீர்கள். இப்படி கேள்வி கேட்க உங்களுக்கு யாராவது சொல்லி கொடுத்து அனுப்பினார்களா? இவ்வாறு அவர் கூறினார். அதன் பிறகும் தினகரன் தொடர்பாக நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தங்க தமிழ்செல்வன் கோபம் அடையாமல் சிரித்து கொண்டே பதில் அளித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி தவிர 16 பேர் கர்நாடக மாநிலம் குடகு விடுதியில் தங்கி உள்ளனர்.
அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் கலைச் செல்வன், ரத்தினசபாபதி ஆகியோரும் தங்கி உள்ளனர்.இவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி உள்ளனர். அனைவரும் தங்களை தமிழகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று நேற்று குடகு விடுதிக்கு வந்த அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வருகிற 4-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை இங்கு தங்கி இருங்கள் என்று அவர்களிடம் தினகரன் கூறியதாக தெரிகிறது. இது குறித்து தங்க செல்வனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அடைந்ததால்தான் தினகரன் உங்களை சந்திக்க வந்து உள்ளாரா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளித்து தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:-
தினகரன் வராவிட்டால் ஏன் வரவில்லை என்று கேட்கிறீர்கள். வந்தால் இப்படி கேட்கிறீர்கள். இப்படி கேள்வி கேட்க உங்களுக்கு யாராவது சொல்லி கொடுத்து அனுப்பினார்களா? இவ்வாறு அவர் கூறினார். அதன் பிறகும் தினகரன் தொடர்பாக நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தங்க தமிழ்செல்வன் கோபம் அடையாமல் சிரித்து கொண்டே பதில் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X