search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை
    X

    திருவனந்தபுரம் அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை

    திருவனந்தபுரம் அருகே காதலித்து ஏமாற்றியதால் காதலனை லாட்ஜுக்கு வரவழைத்து மர்ம உறுப்பை துண்டித்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை அடுத்த மலப்புரம் பகுதியில் திரூர் ரெயில்நிலையம் உள்ளது. இதன் அருகே ஏராளமான லாட்ஜுகளும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு லாட்ஜில் இருந்து ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனால் அந்த லாட்ஜின் ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்த போது லாட்ஜ் அறைக்கு வெளியே ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடித்தபடி கிடந்தார். அவரது ஆடைகளும் ரத்தத்தால் நனைந்து இருந்தது.

    அவரிடம் நடந்தது என்ன என்று ஊழியர்கள் விசாரித்த போது அவர் சரியான பதில் கூறவில்லை. மேலும் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விட்டார்.

    உடனே இதுபற்றி மலப்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை

    நடத்தியபோது அவரது பெயர் இர்ஷாத் (வயது 26) என்பதும் மலப்புரம் அருகே உள்ள குற்றிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் தனது மர்ம உறுப்பை தானே அறுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஆனால் அவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இர்ஷாத்தும் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் நீண்ட நாட் களாக காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு வீட்டுக்கு தெரியாமல் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    இதற்கிடையில் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் இர்ஷாத் வெளிநாடு சென்றுவிட்டார். இதுபற்றி தெரியாத அவரது பெற்றோர் இர்ஷாத்துக்கு வேறு இடத்தில் பெண் பார்த்தனர். ஊர் திரும்பிய இர்ஷாத்தும் தனது ரகசிய திருமணத்தை மறைத்துவிட்டு பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இதையறிந்த அவரது காதல் மனைவி ஆத்திரம் அடைந்தார். தன்னை ஏமாற்றிவிட்டு வேறு திருமணம் செய்ய திட்டமிடும் இர்ஷாத்துக்கு நூதன தண்டனை வழங்க முடிவு செய்தார். அதன்படி அவருக்கு போன் செய்து திரூர் அருகே உள்ள லாட்ஜூக்கு வர வழைத்தார். தான் ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த கத்தியால் அவரது மர்ம உறுப்பை துண்டித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

    போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக இர்ஷாத் தானே மர்ம உறுப்பை வெட்டிக் கொண்டதாக நாடகம் ஆடி உள்ளார். இந்த தகவல்கள் தெரியவந்ததும் போலீசார் அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×