என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரசில் இருந்து விலகிய மராட்டிய முன்னாள் முதல்வர் நாராயண் ரானே பா.ஜ.க.வில் இணைய வாய்ப்பு
Byமாலை மலர்21 Sep 2017 2:02 PM GMT (Updated: 21 Sep 2017 2:02 PM GMT)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மராட்டிய முதல்வரான நாராயண் ரானே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர் பா.ஜ.க.வில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 1999–ம் ஆண்டு சிவசேனா தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போது, நாராயண் ரானே முதல்–மந்திரியாக இருந்தவர். உத்தவ் தாக்கரேயின் நிர்வாகத்திறன் குறித்து பகிரங்கமாக விமர்சனம் காரணமாக கடந்த 2005–ம் ஆண்டு ஜூலை மாதம் சிவசேனாவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது, மராட்டியத்தில் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்ததால் அவருக்கு வருவாய்த்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதோடு, காங்கிரசின் மூத்த தலைவர் என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றார்.
அதன்பின்னர், 2009–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், நாராயண் ரானே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அத்துடன், வருவாய் மற்றும் தொழில்துறை மந்திரியாக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். இந்தநிலையில், கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பாரதீய ஜனதா– சிவசேனா கூட்டணி ஆட்சி மலர்ந்தது. இதனையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகிய அவர், காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவானின் செயல்பாட்டை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாது பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கச் செய்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று, அவர் அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
நான் காங்கிரசில் சேர்ந்தபோது, என்னை 6 மாதத்தில் முதல்–மந்திரியாக ஆக்குவதாக கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் உறுதியளித்தார். சோனியா காந்தியும் என்னிடம் இரண்டு முறை அப்படி கூறினார். இதற்காக 12 ஆண்டுகள் காத்திருந்து பார்த்தேன். இருந்தாலும், இதுநாள் வரை அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கட்சியில் எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுமில்லை. ஆகையால், நான் காங்கிரசில் இருந்து விலகுகிறேன். அதோடு மராட்டிய மேல்–சபை உறுப்பினர் (எம்.எல்.சி) பதவியையும் ராஜினாமா செய்கிறேன். என்னுடைய மகன் நிலேஷ் ரானேயும் காங்கிரசில் இருந்து விலகுகிறார், என அவர் கூறியுள்ளார்.
அவரிடம் பா.ஜனதாவில் இணைவது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘‘அடுத்து எங்கே செல்வது என்று இன்னமும் நான் முடிவு எடுக்கவில்லை’’ என்று அவர் பதில் அளித்தார். நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அவர் பாரதீய ஜனதாவில் இணைய வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X