என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கால்வாய் சுவர் உடைப்புக்கு முதலைதான் காரணம் என்பார் நிதிஷ்: லாலு கிண்டல்
பாட்னா:
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காக கங்கை கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கங்கை நீரை கொண்டு செல்வதற்காக ரூ.390 கோடி செலவில் புதிய கால்வாய் கட்டப்பட்டது.
இதனை நேற்று முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. இதையொட்டி முதல் நாளில் கால்வாயில் நீர் நிரப்பும் பணி நடந்தது. 5 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் கால்வாயில் விடப்பட்டது.
அப்போது அழுத்தம் தாங்காமல் கால்வாய் சுவரின் ஒரு பகுதி திடீர் என்று இடிந்து விழுந்தது. காகல்கானில் ஏற்பட்ட இந்த உடைப்பு காரணமாக, கால்வாயில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி அருகில் 3 கி.மீ. சுற்றளவுக்கு இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
கால்வாய் கட்டுமானப் பணியில் ஊழல் நடந்து இருப்பதாக முன்னாள் துணை முதல்-மந்திரியும் லாலு பிரசாத் யாதவ் மகனுமான தேஜஸ்வி பிரதாப் புகார் கூறியிருக்கிறார்.
இதுபற்றி லாலு பிரசாத் யாதவ் கூறும் போது, ‘கடந்த மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றின் கரைகளை எலிகள் பலவீனப்படுத்தியதாக முதல்வர் நிதிஷ் குமார் கூறியிருந்தார். இப்போது கால்வாய் உடைந்ததற்கு முதலை காரணம் என்று சொல்வாரா?’ என கிண்டலாக தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்