என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிவினைவாத சக்திகள் நாட்டை ஆள்வதால் உலகளவில் இந்தியாவின் மதிப்பு சிதைந்து வருகிறது: ராகுல் காந்தி பேச்சு
Byமாலை மலர்21 Sep 2017 6:19 AM GMT (Updated: 21 Sep 2017 6:19 AM GMT)
பிரிவினைவாத சக்திகள் நாட்டை ஆள்வதால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு சிதைந்து வருகிறது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘இந்தியாவில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் கடும் சவால்களை சந்தித்து வருகின்றன. பிரிவினைவாத சக்திகள் இந்தியாவின் அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் தீங்கு விளைவித்து வருகின்றன’ என பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
மேலும், ‘இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக வேலை தேடும் 30,000 பேரில் 450 பேருக்கே வேலை கிடைத்து வருகிறது. சரியான வேலைவாய்ப்பை அளிக்காமல் இளைஞர்களுக்கு தெளிவான முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுக்க முடியாது.
வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் பா.ஜ.க. அரசு தோற்றுவிட்டது. சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ எனவும் ராகுல் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘இந்தியாவில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் கடும் சவால்களை சந்தித்து வருகின்றன. பிரிவினைவாத சக்திகள் இந்தியாவின் அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் தீங்கு விளைவித்து வருகின்றன’ என பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
மேலும், ‘இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக வேலை தேடும் 30,000 பேரில் 450 பேருக்கே வேலை கிடைத்து வருகிறது. சரியான வேலைவாய்ப்பை அளிக்காமல் இளைஞர்களுக்கு தெளிவான முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுக்க முடியாது.
வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் பா.ஜ.க. அரசு தோற்றுவிட்டது. சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ எனவும் ராகுல் வலியுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X