என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிராய்-யின் புதிய விதிமுறைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு
Byமாலை மலர்20 Sep 2017 6:44 PM GMT (Updated: 20 Sep 2017 6:44 PM GMT)
இரு நெட்வொர்க்-களுக்கு இடையே உள்ள இணைப்பு கட்டணம் குறைக்க டிராய் எடுத்துள்ள நடவடிக்கையால் இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி:
இரு நெட்வொர்க்-களுக்கு இடையே உள்ள இணைப்பு கட்டணம் குறைக்க டிராய் எடுத்துள்ள நடவடிக்கையால் இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொபைல் போனில் ஒரு நெட்வொர்க்கின் சிம்கார்டில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கின் சிம்கார்டுக்கு பேசும்போது, அந்த அழைப்பை இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை 14 காசுகளாக இருந்த இக்கட்டணம், 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ இதை அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த இணைப்பு கட்டணம் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராய்-யின் புதிய அறிவிப்பால் மொபைல்போன் அழைப்பு கட்டணங்களும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டிராய்-யின் இந்த புதிய விதிமுறைகளால் நிதி இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இந்த விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அந்நிறுவனங்கள் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நெட்வொர்க்-களுக்கு இடையே உள்ள இணைப்பு கட்டணம் குறைக்க டிராய் எடுத்துள்ள நடவடிக்கையால் இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொபைல் போனில் ஒரு நெட்வொர்க்கின் சிம்கார்டில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கின் சிம்கார்டுக்கு பேசும்போது, அந்த அழைப்பை இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை 14 காசுகளாக இருந்த இக்கட்டணம், 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ இதை அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த இணைப்பு கட்டணம் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராய்-யின் புதிய அறிவிப்பால் மொபைல்போன் அழைப்பு கட்டணங்களும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டிராய்-யின் இந்த புதிய விதிமுறைகளால் நிதி இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இந்த விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் அந்நிறுவனங்கள் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X