search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2ஜி ஊழல் வழக்கில் தீர்ப்பு தேதி அக்டோபர் 25-ல் அறிவிக்கப்படும்: சிபிஐ நீதிமன்றம்
    X

    2ஜி ஊழல் வழக்கில் தீர்ப்பு தேதி அக்டோபர் 25-ல் அறிவிக்கப்படும்: சிபிஐ நீதிமன்றம்

    2ஜி ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி அக்டோபர் 25-ம் தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ.1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம் சாட்டியது.

    இது தொடர்பாக முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.கனிமொழி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டு காலமாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஆகஸ்ட் 25-ந்தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்து இருந்தார். ஆனால் தீர்ப்பு தயாராகாததால் செப்டம்பர் 20-ந்தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் தேதியை நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இன்றும் தீர்ப்பு தேதி வெளியிடப்படவில்லை. அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு குறித்த தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியுள்ளார். தீர்ப்பு வழங்க மேலும் கால அவகாசம் தேவை என்றும் நீதிபதி ஷைனி தெரிவித்தார்.
    Next Story
    ×