search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை: எல்லை பாதுகாப்பு படை அதிரடி
    X

    பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை: எல்லை பாதுகாப்பு படை அதிரடி

    பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அஜ்னாலா பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ளது. அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவ முயற்சித்தனர். இதையறிந்த பாதுகாப்பு படையினர் அவர்கள நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் ஊடுருவ முயன்ற இரண்டு
    பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 4 கிலோ ஹெராயின், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், பிஸ்டல்கள், பாகிஸ்தான் சிம் கார்டு கொண்ட செல்போன்கள் மற்றும் 20,000 ரூபாய் பாகிஸ்தான் கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.

    இதுதொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறுகையில், பஞ்சாப் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×