search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கைது
    X

    தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கைது

    மராட்டியம் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் போனில் பணம் கேட்டு மிரட்டியதாக கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    மும்பை:

    மராட்டியம் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் போனில் பணம் கேட்டு மிரட்டியதாக கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ள தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கார் மராட்டிய மாநிலத்தில் வசித்து வருகிறார். துபாயில் இருந்த இவர் சில வழக்குகள் காரணமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு போன் மூலம் ஒரு கும்பலைச் சேர்ந்தவர் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் பதிவானது. இதனையடுத்து, இந்த வழக்கின் கீழ் தானே நகர போலீசாரால் நேற்றிரவு இக்பால் கஸ்கார் கைது செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×