search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம்: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி
    X

    அசாம்: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

    அசாம் மாநிலத்தில் படகு பந்தயத்தை பார்க்க சென்றவர்களின் படகுகள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்துக்குட்பட்ட சபோன் ஆற்றில் நேற்று படகு பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை பார்க்க சென்றவர்கள் சுமார் 50 பேர் 4 படகுகளில் நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது, வீசிய பலத்த காற்றால் நிலைதடுமாறிய படகுகள் ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் சிறுவர், சிறுமியர் உள்பட பத்துபேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    Next Story
    ×