search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி: செங்கோட்டையில் திட்டம் போட்டு உதவுவது போல நடித்து பெண் கற்பழிப்பு
    X

    டெல்லி: செங்கோட்டையில் திட்டம் போட்டு உதவுவது போல நடித்து பெண் கற்பழிப்பு

    டெல்லி செங்கோட்டை அருகே 23 வயது பெண்ணை திட்டம் போட்டு, உதவுவது போல நடித்து கற்பழித்த டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை அருகே உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு 23 வயதான பெண் லூதியானா செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் அருகே அமர்ந்திருந்த சன்னு குமார் என்பவர் ரெயில் ரத்தாகிவிட்டதாகவும், வேண்டுமானால் பேருந்து நிலையத்தில் தனது டாக்சியில் இறக்கி விடுவதாகவும் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து, அப்பெண் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு டாக்சியில் சென்றுள்ளார். அங்குள்ள பூங்கா அருகே டாக்சி சென்றுகொண்டிருந்த போது, சன்னு குமார் அப்பெண்ணை பலவந்தமாக கற்பழித்துள்ளார். பின்னர், பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் அப்பெண்ணை இறக்கி விட்டுள்ளார்.

    இதையடுத்து, பாதிக்கப்பட்ட அப்பெண் போலீசில் சென்று புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டாக்சி டிரைவர் சன்னு குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×