என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உ.பி.யில் நாளை சுற்றுப்பயணம்
Byமாலை மலர்13 Sep 2017 1:32 PM GMT (Updated: 13 Sep 2017 1:32 PM GMT)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற பின்னர் முதல் முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு நாளை முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
டெல்லியில் இருந்து நாளை விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு மதியம் 3 மணிக்கு வந்தடைவார்.
விமான நிலையத்தில் மாநில கவர்னர் ராம்நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் சில மந்திரிகள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
கான்பூரில் சுமார் 1,500 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். அதன்பின்னர் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனது வீட்டில் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். கான்பூர் விழாவை முடித்துவிட்டு அவர் தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை டெல்லி திரும்புகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சொந்த கிராமத்துக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற பின்னர் முதல் முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு நாளை முதல் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
டெல்லியில் இருந்து நாளை விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு மதியம் 3 மணிக்கு வந்தடைவார்.
விமான நிலையத்தில் மாநில கவர்னர் ராம்நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் சில மந்திரிகள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
கான்பூரில் சுமார் 1,500 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். அதன்பின்னர் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனது வீட்டில் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். கான்பூர் விழாவை முடித்துவிட்டு அவர் தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை டெல்லி திரும்புகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சொந்த கிராமத்துக்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X