என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொகுசு கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
Byமாலை மலர்13 Sep 2017 6:55 AM GMT (Updated: 13 Sep 2017 6:55 AM GMT)
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் சொகுசு கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர்:
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் எல்லாப்பூரிலிருந்து சொகுசு காரில் சுமார் 10 பேர் அங்கோலா மாவட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது உத்தர கன்னடா மாவட்டம் கர்வார் தாலுக்காவைச் சேர்ந்த அரபில்லு காட் பகுதியில் வைத்து ஏதிரே வந்த லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயமடைந்த ஒருவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் பெலாகவி மாவட்டம் சிக்கோடி பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் எல்லாப்பூரிலிருந்து சொகுசு காரில் சுமார் 10 பேர் அங்கோலா மாவட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது உத்தர கன்னடா மாவட்டம் கர்வார் தாலுக்காவைச் சேர்ந்த அரபில்லு காட் பகுதியில் வைத்து ஏதிரே வந்த லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயமடைந்த ஒருவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் பெலாகவி மாவட்டம் சிக்கோடி பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X