என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி: கதவு திறந்த நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் - அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் - வீடியோ
Byமாலை மலர்11 Sep 2017 9:35 PM GMT (Updated: 11 Sep 2017 9:35 PM GMT)
டெல்லியில் கதவு திறந்த நிலையில் மெட்ரோ ரெயில் ஓடியதால், அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் கதவு திறந்த நிலையில் மெட்ரோ ரெயில் ஓடியதால், அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களும் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் கதவு திறந்த நிலையில் நேற்று மெட்ரோ ரெயில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் உள்ள சாவ்ரி பஜார் ரெயில் நிலையத்தில் இருந்து காஷ்மேரே கேட் பகுதிக்கு நேற்று இரவு 10 மணிக்கு மெட்ரோ ரெயில் புறப்பட்டது. ரெயில் நிலையத்தை கடந்தும் கதவுகள் மூடப்படவில்லை. அதனால் மெட்ரோ ரெயிலின் கதவுகள் திறந்தபடி இருந்தது. கதவுகள் மூடப்படாத நிலையில் மெட்ரோ ரெயில் அடுத்த ரெயில் நிலையத்தை அடைந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்த மஞ்சள் கோடு உள்பட அனைத்தும் பதிவாகி இருந்தது. கதவு மூடப்படாத மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கதவு திறந்த நிலையில் மெட்ரோ ரெயில் ஓடியதால், அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களும் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் கதவு திறந்த நிலையில் நேற்று மெட்ரோ ரெயில் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் உள்ள சாவ்ரி பஜார் ரெயில் நிலையத்தில் இருந்து காஷ்மேரே கேட் பகுதிக்கு நேற்று இரவு 10 மணிக்கு மெட்ரோ ரெயில் புறப்பட்டது. ரெயில் நிலையத்தை கடந்தும் கதவுகள் மூடப்படவில்லை. அதனால் மெட்ரோ ரெயிலின் கதவுகள் திறந்தபடி இருந்தது. கதவுகள் மூடப்படாத நிலையில் மெட்ரோ ரெயில் அடுத்த ரெயில் நிலையத்தை அடைந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்த மஞ்சள் கோடு உள்பட அனைத்தும் பதிவாகி இருந்தது. கதவு மூடப்படாத மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X