என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்திக்கிறார்கள்
Byமாலை மலர்11 Sep 2017 3:53 AM GMT (Updated: 11 Sep 2017 4:11 AM GMT)
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவை அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திக்கிறார்கள். பொதுக்குழு குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவை அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவ்வப்போது நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை(செவ்வாய்க் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. அதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குஷால் நகரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை அவரது ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கட்கிழமை) சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணி நாளை நடத்தும் பொதுக்குழு கூட்டம் குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவை அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவ்வப்போது நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. வில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை(செவ்வாய்க் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. அதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குஷால் நகரில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை அவரது ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கட்கிழமை) சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணி நாளை நடத்தும் பொதுக்குழு கூட்டம் குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X