search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. சட்ட மேல்சபை இடைத்தேர்தல்: யோகி ஆதித்யாநாத் போட்டியின்றி தேர்வு
    X

    உ.பி. சட்ட மேல்சபை இடைத்தேர்தல்: யோகி ஆதித்யாநாத் போட்டியின்றி தேர்வு

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்ட மேல்சபை இடைத்தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் மற்றும் துணை முதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி அம்மாநில முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றது.

    இதற்கிடையில், அம்மாநில சட்ட மேல்சபையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த புக்கல் நவாப், யஷ்வந்த், சரோஜினி அகர்வால், அஷோக் பாஜ்பய் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்தது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மேல்சபை உறுப்பினர் தாக்கூர் ஜைவீர் சிங் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்ததால் அவரது பதவி பறிபோனது.

    இதையடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்ட மேல்சபையில் காலியாக உள்ள ஐந்து இருக்கைகளுக்கான இடைத்தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

    இவர்கள் மூன்று பேரும் அம்மாநில சட்டசபை மற்றும் சட்ட மேல்சபையில் உறுப்பினராக இல்லாத நிலையில் இவர்கள் ஆறு மாதங்களுக்குள் முறைப்படி சட்டசபை அல்லது சட்ட மேல்சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    இதேபோல் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மந்திரிசபையில் அங்கம் வகிக்கும் மோஹ்சின் ராசா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோரும் அம்மாநில சட்டசபை மற்றும் சட்ட மேல்சபையில் உறுப்பினராக இல்லை.

    இந்நிலையில், வரும் 15-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், துணை முதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் மந்திரிகள் மோஹ்சின் ராசா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோர் கடந்த 5-ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை 6-ம் தேதி நடைபெற்றது.

    இவர்களில் யோகி ஆதித்யாநாத், கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, சுவதந்திர டியோ சிங் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் இன்று பிற்பகல் அறிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த யோகி ஆதித்யாநாத்திடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மோஹ்சின் ராசாவின் மனுவின் மீதான பரிசீலனையும் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 11-ம் தேதி அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×