என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்ட மேலவை இடைத்தேர்தல் - உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் மனுதாக்கல்
Byமாலை மலர்6 Sep 2017 12:38 AM GMT (Updated: 6 Sep 2017 12:38 AM GMT)
சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் உள்பட 5 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.பி. யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இதேபோல் மற்றொரு எம்.பி. கேசவ் பிரசாத் மவுரியா, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த மந்திரிசபையில் உள்ள மற்றொரு துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா, மந்திரிகள் மோசின் ரஸா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோரும் சட்டசபையின் இரு அவைகளிலும் இல்லை.
ஆதித்யநாத் உள்பட 5 பேரும் சட்ட மேலவை எம்.எல்.சி.யாக பதவி ஏற்கும் விதமாக சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 4 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவரும் தங்கள் எம்.எல்.சி. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில் சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட ஆதித்யநாத் உள்பட 5 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இதற்கான வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது. அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு பிறகு உத்தரபிரதேச சட்ட மேலவையில் இருந்து முதல்-மந்திரி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து எம்.பி. யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இதேபோல் மற்றொரு எம்.பி. கேசவ் பிரசாத் மவுரியா, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த மந்திரிசபையில் உள்ள மற்றொரு துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா, மந்திரிகள் மோசின் ரஸா, சுவதந்திரதேவ் சிங் ஆகியோரும் சட்டசபையின் இரு அவைகளிலும் இல்லை.
ஆதித்யநாத் உள்பட 5 பேரும் சட்ட மேலவை எம்.எல்.சி.யாக பதவி ஏற்கும் விதமாக சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த 4 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவரும் தங்கள் எம்.எல்.சி. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில் சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட ஆதித்யநாத் உள்பட 5 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இதற்கான வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது. அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு பிறகு உத்தரபிரதேச சட்ட மேலவையில் இருந்து முதல்-மந்திரி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X