என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி மந்திரிசபையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 12 மந்திரி பதவி
Byமாலை மலர்3 Sep 2017 10:49 PM GMT (Updated: 3 Sep 2017 10:49 PM GMT)
மத்திய மந்திரிசபையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடியையும் சேர்த்து 12 மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா, மகேந்திரநாத் பாண்டே, சஞ்சீவ் பல்யான் ஆகிய 3 பேரும் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.
அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சத்யபால் சிங்கும், சிவபிரதாப் சுக்லாவும் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
இதன்மூலம், மத்திய மந்திரிசபையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடியையும் சேர்த்து 12 மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
மோடியின் மந்திரிசபை இப்போது 76 பேரை கொண்டுள்ளது. அவர்களில் பிரதமர் உள்பட 28 பேர் கேபினட் அந்தஸ்தும், 11 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி அந்தஸ்தும், 37 பேர் ராஜாங்க மந்திரி அந்தஸ்தும் வகிக்கிறார்கள்.
மத்திய மந்திரிசபையில் இப்போது பெண் மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆகும்.
நிர்மலா சீதாராமன் ராணுவ மந்திரி பதவி ஏற்றுள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவில் 2 பெண்கள் இடம் பெறுகிறார்கள். ஒருவர் நிர்மலா சீதாராமன், மற்றொருவர் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ்.
பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா, மகேந்திரநாத் பாண்டே, சஞ்சீவ் பல்யான் ஆகிய 3 பேரும் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.
அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சத்யபால் சிங்கும், சிவபிரதாப் சுக்லாவும் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
இதன்மூலம், மத்திய மந்திரிசபையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடியையும் சேர்த்து 12 மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
மோடியின் மந்திரிசபை இப்போது 76 பேரை கொண்டுள்ளது. அவர்களில் பிரதமர் உள்பட 28 பேர் கேபினட் அந்தஸ்தும், 11 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி அந்தஸ்தும், 37 பேர் ராஜாங்க மந்திரி அந்தஸ்தும் வகிக்கிறார்கள்.
மத்திய மந்திரிசபையில் இப்போது பெண் மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆகும்.
நிர்மலா சீதாராமன் ராணுவ மந்திரி பதவி ஏற்றுள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவில் 2 பெண்கள் இடம் பெறுகிறார்கள். ஒருவர் நிர்மலா சீதாராமன், மற்றொருவர் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X