என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோரக்பூர் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முதல்வர் மனைவியுடன் கைது
Byமாலை மலர்29 Aug 2017 11:46 AM GMT (Updated: 29 Aug 2017 11:46 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியான விவகாரத்தில் அக்கல்லூரியின் முதல்வர் ராஜிவ் மிஷ்ரா மற்றும் அவரது மனைவியை சிறப்பு படை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம்
அறிக்கை அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஸ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் இந்த வழக்கு கோரக்பூருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சதி, கொடூர கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும், ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த சிறப்பு படை போலீசார் மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஷ்ரா மற்றும் அவரது மனைவி பூர்ணிமா சுக்லா ஆகியோரை கான்பூரில் இன்று கைது செய்தனர். கைதான இருவரையும் கோரக்பூர் சென்று விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம்
அறிக்கை அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஸ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் இந்த வழக்கு கோரக்பூருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சதி, கொடூர கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும், ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்து வந்த சிறப்பு படை போலீசார் மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஷ்ரா மற்றும் அவரது மனைவி பூர்ணிமா சுக்லா ஆகியோரை கான்பூரில் இன்று கைது செய்தனர். கைதான இருவரையும் கோரக்பூர் சென்று விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X