என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டிய மாநிலத்தில் வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி
Byமாலை மலர்28 Aug 2017 11:24 PM GMT (Updated: 28 Aug 2017 11:25 PM GMT)
மராட்டிய மாநிலத்தில் கனமழையால் சேதமான பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் கனமழையால் சேதமான பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் நிம்போடி கிராமத்தை சேர்ந்த அகமது நகரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் அந்த பகுதியில் கனமழை பெய்ததால், பள்ளி வகுப்பறைகள் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த பள்ளி நேற்றும் வழக்கம்போல் செயல்பட்டது. 5-ம் வகுப்பில் 35-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர் லீனா பாட்டீல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் அங்கிருந்த ஷ்ரேயாஸ் ரஹானே, சுமேஷ் பிங்கார்திவ் மற்றும் வைஷ்ணவி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். லீனா பாட்டீலுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததை அறிந்த கிராமத்தினர், விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழை பெய்ததால் சேதமான பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கனமழையால் சேதமான பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் நிம்போடி கிராமத்தை சேர்ந்த அகமது நகரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் அந்த பகுதியில் கனமழை பெய்ததால், பள்ளி வகுப்பறைகள் சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த பள்ளி நேற்றும் வழக்கம்போல் செயல்பட்டது. 5-ம் வகுப்பில் 35-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர் லீனா பாட்டீல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் அங்கிருந்த ஷ்ரேயாஸ் ரஹானே, சுமேஷ் பிங்கார்திவ் மற்றும் வைஷ்ணவி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். லீனா பாட்டீலுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததை அறிந்த கிராமத்தினர், விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழை பெய்ததால் சேதமான பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X