search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூலை முதல் தற்போது வரை பெட்ரோல் விலை ரூ.6 உயர்ந்துள்ளது - டீசல் விலை ரூ.3.67 அதிகரிப்பு
    X

    ஜூலை முதல் தற்போது வரை பெட்ரோல் விலை ரூ.6 உயர்ந்துள்ளது - டீசல் விலை ரூ.3.67 அதிகரிப்பு

    பெட்ரோல்-டீசல் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை 6 ரூபாய் வரை அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பெட்ரோல்-டீசல் விலையை மாதந்தோறும் 1 மற்றும் 16-ந் தேதிகளில் பெட்ரோல் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன. கடந்த 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறைக்கு பதிலாக, தற்போது தினசரி அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. தினமும் காலை 6 மணிக்கு அன்றைய விலை நிர்ணயிக்கப்படுகிறது.



    இதன் மூலம் பெட்ரோல்-டீசல் விலையில் தினந்தோறும் லேசான மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் ஒருசில நாட்களை தவிர மீதமுள்ள நாட்களில் 2 முதல் 9 பைசா வரை அதிகரித்து தான் வருகிறது. இவ்வாறு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை 6 ரூபாய் வரை அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் நேற்றைய விலை ரூ.69.04 (சென்னையில் ரூ.71.45) ஆக இருந்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச விலை ஆகும். இதைப்போல டீசலும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ரூ.3.67 அதிகரித்து உள்ளது. 
    Next Story
    ×