என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேச பள்ளியில் விஷவாயு தாக்கியதால் 50 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
Byமாலை மலர்24 Aug 2017 12:11 AM GMT (Updated: 24 Aug 2017 12:11 AM GMT)
மத்திய பிரதேச பள்ளியில் விஷவாயுவை சுவாசித்த 50 மாணவ-மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆசிரியர்கள் சேர்த்தனர்.
சிந்த்வாரா:
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில், நேற்று சுமார் 800 மாணவ-மாணவிகள் காலை ஜெபத்துக்காக அணிவகுத்து நின்றனர். அப்போது அருகில் உள்ள குளிர்பதன கிடங்கு ஒன்றில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிந்தது.
இந்த விஷவாயுவை சுவாசித்த 50 மாணவ-மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆசிரியர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று, மற்ற மாணவ-மாணவிகள் அனைவரையும் வெளியேற்றினர். மேலும் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டன.
குளிர்பதன கிடங்கில் வைத்திருந்த சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த வாயு கசிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குளிர்பதன கிடங்கு அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில், நேற்று சுமார் 800 மாணவ-மாணவிகள் காலை ஜெபத்துக்காக அணிவகுத்து நின்றனர். அப்போது அருகில் உள்ள குளிர்பதன கிடங்கு ஒன்றில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிந்தது.
இந்த விஷவாயுவை சுவாசித்த 50 மாணவ-மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆசிரியர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று, மற்ற மாணவ-மாணவிகள் அனைவரையும் வெளியேற்றினர். மேலும் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டன.
குளிர்பதன கிடங்கில் வைத்திருந்த சிலிண்டர் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த வாயு கசிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குளிர்பதன கிடங்கு அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X