என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகையிலை பயன்படுத்தும் மாணவர்கள் படிப்பில் மந்தமாகி விடுவார்கள்: ஆய்வில் தகவல்
Byமாலை மலர்23 Aug 2017 12:24 PM GMT (Updated: 23 Aug 2017 12:24 PM GMT)
புகையிலை பயன்படுத்தும் மாணவர்கள் படிப்பில் பின் தங்கி இருப்பார்கள் என கேரளாவில் உள்ள பள்ளிகளில் எடுத்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை மற்றும் உளவியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 7500-க்கும் அதிகமான மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் புகையிலை பயன்படுத்தும் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் புகையிலை பயன்படுத்துவது மற்ற போதைப் பொருள்களை பயன்படுத்துவதற்கு வழி வகுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே மனநல நோய்களுக்கு உள்ளாகின்றனர். வாழ்நாள் முழுவதும் புகையிலை பயன்படுத்தும் மாணவர்களில் 76.3 சதவீதம் பேர் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைகின்றனர். மீதி 24.7 சதவீதம் மாணவர்கள் ஆண்டு தேர்வில் தோல்வியடைகின்றனர்.
மொத்தம் 6.9 சதவீதம் மாணவர்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்சமயம் புகையிலை பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை மற்றும் உளவியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 7500-க்கும் அதிகமான மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் புகையிலை பயன்படுத்தும் மாணவர்கள் கல்வியில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் புகையிலை பயன்படுத்துவது மற்ற போதைப் பொருள்களை பயன்படுத்துவதற்கு வழி வகுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே மனநல நோய்களுக்கு உள்ளாகின்றனர். வாழ்நாள் முழுவதும் புகையிலை பயன்படுத்தும் மாணவர்களில் 76.3 சதவீதம் பேர் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைகின்றனர். மீதி 24.7 சதவீதம் மாணவர்கள் ஆண்டு தேர்வில் தோல்வியடைகின்றனர்.
மொத்தம் 6.9 சதவீதம் மாணவர்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்சமயம் புகையிலை பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X