என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது: மத்திய மந்திரிகளுக்கு மோடி எச்சரிக்கை
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சி மீது ஊழல் கரை படிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.
2019 தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக ஊழலில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்வது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அரசு வாகனங்களை மந்திரிகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ தவறான வழிகளில் பயன் படுத்தக்கூடாது என்று எச்சரித்துள்ளார். மந்திரிகள் அரசு பயணமாக செல்லும் விருந்தினரை மாளிகையில் தான் தங்க வேண்டும் என்றும் 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மந்திரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.
சில மந்திரிகள் அரசு விருந்தினர் மாளிகையை விட்டு விட்டு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதால் மோடி கடும் அதிருப்தியில் உள்ளார். புதன்கிழமை நடந்த மந்திரிசபை கூட்டத்தின் போது மோடி மந்திரிகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்