search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் சோகம்: 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டதை அறிந்த தந்தை மாரடைப்பால் மரணம்
    X

    உ.பி.யில் சோகம்: 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டதை அறிந்த தந்தை மாரடைப்பால் மரணம்

    உ.பி.யில் 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார் என்பதை அறிந்த அடுத்த நொடியிலேயே மாரடைப்பால் தந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் அருகில் உள்ள வயல்காட்டுக்கு சென்றார். அப்போது அந்த சிறுமியை போலீஸ்
    கான்ஸ்டபிளும், உள்ளூர் கிராம தலைவரும் வழிமறித்து மிரட்டி கூட்டாக சேர்ந்து கற்பழித்தனர்.

    அவர்களின் பிடியில் இருந்து தப்பமுடியாத நிலையில் அந்த சிறுமி போட்ட கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

    அலங்கோல நிலையில் கிடந்த சிறுமி இருவரால் கற்பழிக்கப்பட்ட செய்தியை கேட்டதும், அவரது தந்தை அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இச்சம்பவம் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    Next Story
    ×