search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனே விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கத்துடன் பெண் உள்பட 4 பேர் கைது
    X

    புனே விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கத்துடன் பெண் உள்பட 4 பேர் கைது

    புனே விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கத்துடன் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புனே:

    புனே விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து விமானம் ஒன்று வந்து இறங்கியது. இதில் வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது பெண் உள்பட 4 பேரின் நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    எனவே அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து சென்று, உடைமைகளை சோதனை போட்டனர். அப்போது அவர்கள் டிராலி பேக் சக்கரம், மின்வயரில் மறைத்து வைத்து இருந்த 4 கிலோ 68 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 38 லட்சம் ஆகும்.

    தங்க கடத்தலில் ஈடுபட்டு சிக்கியவர்கள் விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்கள் பெண் ரபஜாகான், ஆசிப்கான், முகமது அஸ்பாக், ஹசைன் என்பது தெரியவந்தது.
    Next Story
    ×