என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை
Byமாலை மலர்20 Aug 2017 3:19 AM GMT (Updated: 20 Aug 2017 3:19 AM GMT)
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினமான இன்று, அவரது நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் இன்று காலை முதல் முக்கிய
பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அவரது தங்கை பிரியங்கா காந்தி, அவரது
கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்து மரியாதை செலுத்தினர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ராஜிவ் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் இன்று காலை முதல் முக்கிய
பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், அவரது தங்கை பிரியங்கா காந்தி, அவரது
கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் வந்து மரியாதை செலுத்தினர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ராஜிவ் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X