என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தீர்மானம்
Byமாலை மலர்19 Aug 2017 10:57 AM GMT (Updated: 19 Aug 2017 10:57 AM GMT)
பீகாரில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த மெகா கூட்டணியின் ஆட்சி கடந்த ஜூலை 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், மறுநாளே பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். அப்போதே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இணைய முடிவெடுத்திருப்பதாக பேசப்பட்டது.
அவரது கூட்டணி முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். அவரது ஆதரவாளர்களும் தனித்து செயல்படத் தொடங்கி உள்ளனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் வீட்டில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டம் நடைபெற்ற அதே சமயத்தில், சரத் யாதவ் தனது ஆதரவாளர்களை திரட்டி கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த மெகா கூட்டணியின் ஆட்சி கடந்த ஜூலை 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், மறுநாளே பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார். அப்போதே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இணைய முடிவெடுத்திருப்பதாக பேசப்பட்டது.
அவரது கூட்டணி முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். அவரது ஆதரவாளர்களும் தனித்து செயல்படத் தொடங்கி உள்ளனர். இதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் வீட்டில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டம் நடைபெற்ற அதே சமயத்தில், சரத் யாதவ் தனது ஆதரவாளர்களை திரட்டி கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X