search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
    X

    திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

    திட்டமிட்டப்படி வரும் வரும் 22-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி ஊழியர் சங்கத்தினர் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 22-ம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

    நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும், செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

    நாடு தழுவிய வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×