என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கில் சஹூர் அகமது ஷா வடாலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்
Byமாலை மலர்18 Aug 2017 2:36 PM GMT (Updated: 18 Aug 2017 2:36 PM GMT)
ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சஹூர் அகமது ஷா வடாலியை, 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரில் மாநில அரசுக்கு எதிராக சில அமைப்புகள் தனித்து செயல்பட்டு வருகின்றன. அவை காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு தேவையான நிதி அளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுபோன்ற அமைப்புகளை கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரின் பிரபல தொழிலதிபரான சஹூர் அகமது ஷா வடாலியை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர்.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஹண்ட்வாரா, குப்வாரா மற்றும் பாரமுல்லா போன்ற பகுதிகளில் உள்ள வடாலியின் உறவினர்கள் மற்றும் அவரது தொழிலாளர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சஹூர் அகமது ஷா வடாலியிடம் விசாரணை முடிந்த நிலையில், அவரை பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் மேலும் தகவல்களைப் பெற வேண்டியிருப்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வடாலியை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் மாநில அரசுக்கு எதிராக சில அமைப்புகள் தனித்து செயல்பட்டு வருகின்றன. அவை காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு தேவையான நிதி அளிப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுபோன்ற அமைப்புகளை கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரின் பிரபல தொழிலதிபரான சஹூர் அகமது ஷா வடாலியை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர்.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஹண்ட்வாரா, குப்வாரா மற்றும் பாரமுல்லா போன்ற பகுதிகளில் உள்ள வடாலியின் உறவினர்கள் மற்றும் அவரது தொழிலாளர்கள் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சஹூர் அகமது ஷா வடாலியிடம் விசாரணை முடிந்த நிலையில், அவரை பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் மேலும் தகவல்களைப் பெற வேண்டியிருப்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வடாலியை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X