என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காள தேர்தல்: 7 நகராட்சிகளையும் கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்
Byமாலை மலர்17 Aug 2017 10:55 PM GMT (Updated: 17 Aug 2017 10:55 PM GMT)
மேற்கு வங்காளத்தில் நாடியா, பிர்பும், தெற்கு தினாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் நாடியா, பிர்பும், தெற்கு தினாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 நகராட்சிகளுக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. கூப்பர்ஸ் கேம்ப், நகல்காட்டி, புனியாட்பூர், துர்காபூர், பன்ஸ்குரா, ஹால்டியா, துப்குரி ஆகிய 7 நகராட்சிகளிலும் ஆளுங்கட்சி வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இடதுசாரிகள் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினருக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் தனது கட்சியினருக்கு வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் நாடியா, பிர்பும், தெற்கு தினாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 நகராட்சிகளுக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. கூப்பர்ஸ் கேம்ப், நகல்காட்டி, புனியாட்பூர், துர்காபூர், பன்ஸ்குரா, ஹால்டியா, துப்குரி ஆகிய 7 நகராட்சிகளிலும் ஆளுங்கட்சி வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பா.ஜனதா 2-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இடதுசாரிகள் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினருக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் தனது கட்சியினருக்கு வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X