search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திரதின பாதுகாப்பு: டெல்லியில் 70,000 போலீஸ் குவிப்பு
    X

    சுதந்திரதின பாதுகாப்பு: டெல்லியில் 70,000 போலீஸ் குவிப்பு

    டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற சுதந்திர தின பாதுகாப்பு பணிக்கு நகரம் முழுவதும் 70,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    புதுடெல்லி:

    71-வது சுதந்திர தினத்தையொட்டி சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்தார். அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க டெல்லி போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.

    டெல்லி செங்கோட்டையின் பாதுகாப்பு பொறுப்பை ராணுவம் ஏற்று ஒருவாரகாலமாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்தது. டெல்லி நகரம் முழுவதும் 70,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மோடி கொடியேற்றிய டெல்லி செங்கோட்டையின் உள்ளேயும், சுற்றிலும் 9,100 போலீசார் குவிக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புபடையின், அதிவிரைவுப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வான்வெளியில் தாக்குதல் நடந்தாலும் சமாளிக்கும் வகையில் விமானப்படை கண்காணிப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×