search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் நிலையங்களில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’
    X

    ரெயில் நிலையங்களில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’

    பயணிகள் நலன் கருதி, ரெயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    மும்பை:

    பயணிகள் நலன் கருதி, ரெயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, கிழக்கு ரெயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 ரெயில் நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படுகிறது.



    இவற்றுக்கு ‘ஒரு ரூபாய் கிளினிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, டாக்டரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். இ.சி.ஜி. ரூ.50-ல் எடுக்கலாம். இதைத் தொடர்ந்து மேற்கு ரெயில்வேயின் கீழ் செயல்படும் 24 ரெயில் நிலையங்களில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×