search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது: பாதுகாப்பு படை அதிரடி
    X

    காஷ்மீரில் 2 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது: பாதுகாப்பு படை அதிரடி

    காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 தீவிரவாதிகள் அவர்களை பார்த்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் யூனிஸ் அகமது மிர் மற்றும் தாஹிர்-உல்-இஸ்லாம் ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×