search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம், கேரளாவைச் சேர்ந்த இருவர் கோவாவில் சடலமாக கண்டெடுப்பு
    X

    தமிழகம், கேரளாவைச் சேர்ந்த இருவர் கோவாவில் சடலமாக கண்டெடுப்பு

    தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் கோவாவில் உள்ள விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
    பணாஜி:

    தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் கோவாவில் உள்ள விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நதீம் அப்துல்லா இருவரும் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனா வாகேடர் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிரேதங்களை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரது குடும்பத்தினருக்கும் இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளனர். மேற்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மரணத்திற்கான காரணம் வெளிவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
    Next Story
    ×