என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி பெயரில் நிறுவனம் தொடங்கி நன்கொடை வசூல்: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
Byமாலை மலர்12 Aug 2017 4:11 PM GMT (Updated: 12 Aug 2017 4:11 PM GMT)
பிரதமர் மோடியின் பெயரில் வீட்டு வசதி சங்கம் தொடங்கி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக கூறி அந்த நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி வீட்டு வசதி திட்டங்களையும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். இதனை பயன்படுத்தி பரீதாபாத்தைச் சேர்ந்த ஜே.பி.சிங் என்பவர் ‘நரேந்திர மோடி விசார் மஞ்ச்’ எனும் வீட்டு வசதி நிறுவனத்தை துவங்கியுள்ளார். அதற்காக ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் தலைவராக ஜே.பி.சிங் என்பவர் தனது புகைப்படத்துடன் காட்சியளிக்கிறார்.
ஆனால், அந்த நிறுவனம் மோடியின் பெயரில் நன்கொடை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுபற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
‘ஜே.பி.சிங்கின் நிறுவனத்துடன் பிரதமருக்கோ அவரது அலுவலகத்திற்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை. ஜே.பி.சிங் தனது நிறுவனத்தின் சார்பாக நன்கொடை வசூலிலும் ஈடுபட்டுள்ளார். இதற்கு அவர் பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளார்’ என சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜே.பி.சிங், அவருக்கு உதவியாக உள்ள அடையாளம் தெரியாத நபர்கள் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி வீட்டு வசதி திட்டங்களையும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். இதனை பயன்படுத்தி பரீதாபாத்தைச் சேர்ந்த ஜே.பி.சிங் என்பவர் ‘நரேந்திர மோடி விசார் மஞ்ச்’ எனும் வீட்டு வசதி நிறுவனத்தை துவங்கியுள்ளார். அதற்காக ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் தலைவராக ஜே.பி.சிங் என்பவர் தனது புகைப்படத்துடன் காட்சியளிக்கிறார்.
ஆனால், அந்த நிறுவனம் மோடியின் பெயரில் நன்கொடை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுபற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
‘ஜே.பி.சிங்கின் நிறுவனத்துடன் பிரதமருக்கோ அவரது அலுவலகத்திற்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை. ஜே.பி.சிங் தனது நிறுவனத்தின் சார்பாக நன்கொடை வசூலிலும் ஈடுபட்டுள்ளார். இதற்கு அவர் பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளார்’ என சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜே.பி.சிங், அவருக்கு உதவியாக உள்ள அடையாளம் தெரியாத நபர்கள் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X