search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படையினர் மீது குறைகூற வேண்டாம்: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
    X

    பாதுகாப்பு படையினர் மீது குறைகூற வேண்டாம்: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

    ராணுவம், கப்பல்படை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மீது யாரும் குறைகூற வேண்டாம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
    பனாஜி:

    கோவாவின் வாஸ்கோ பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை மந்திரி தர்மேந்திர பிரதான், ஷவுர்யா என்ற கடற்படை கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்திய பாதுகாப்பு படையினர் மீது குறை கூறுபவர்கள், அவர்களது திறமை குறித்து தெரிந்து கொள்வதில்லை. நாம் வீடுகளில் நிம்மதியாக வாழ்வதற்காக, அவர்கள் தினமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு. முதலில், அரசியல்வாதிகளை மட்டுமே குறைகூறி வந்தனர். ஆனால், இப்போது ராணுவம், கப்பல்படை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினரையும் குறைகூறி வருகின்றனர். தகுந்த காரணம் இன்றி யாரும் யாரையும் குறைகூற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இரட்டை என்ஜின் கொண்ட ஹெலிகாப்டர், 5 அதிவிரைவு படகுகளை நிறுத்தும் வசதி கொண்டது இந்த கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×