என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கு 566 டி.எம்.சி தண்ணீர்: தமிழக அரசு வாதம்
Byமாலை மலர்11 Aug 2017 3:36 AM GMT (Updated: 11 Aug 2017 3:36 AM GMT)
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பளவை கணக்கில் கொண்டால் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கு 566 டி.எம்.சி.தண்ணீர் என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. 4-வது நாளாக நேற்று தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள்.
சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு 29 லட்சம் ஏக்கர் உள்ளது. ஆனால் காவிரி நடுவர் மன்றம் இதில் 5 லட்சம் ஏக்கரை குறைத்து 24 லட்சமாக மதிப்பிட்டது தமிழ்நாட்டுக்கு மிகவும் பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.
29 லட்சம் ஏக்கருக்கான பாசன தேவை, குடிநீருக்கான தேவை ஆகியவற்றை கணக் கில் கொண்டால், தமிழ்நாட்டுக்கு உரிய நியாயமான நீர் பங்கீடு 566 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) ஆகும். காவிரி நடுவர் மன்றம் எங்கள் வாதங் களை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் பயன்பாட்டு உரிமையை 419 டி.எம்.சி.யாக குறைத்து உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு 566 டி.எம்.சி.யாக உயர்த்தி உத்தரவிட வேண்டும்.
மொத்தம் உள்ள 740 டி.எம்.சி. தண்ணீரை 4 மாநிலங்களும் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
அவர் இவ்வாறு கூறியதும் குறுக்கிட்ட கர்நாடக அரசு வக்கீல் மோகன் கத்தார்க்கி, பங்கீட்டுக்குரிய தண்ணீரின் மொத்த அளவு 740 டி.எம்.சி. என்றால் காவிரி நடுவர் மன்றம் எடுக்காத முடிவை இந்த கோர்ட்டு எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய நியாயமான பங்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், இந்த கோர்ட்டு இதுபற்றிய தீர்ப்பை வெளியிட்டால் பிறகு காவிரி நடுவர் மன்றத்துக்கு எந்த வேலையும் இருக்காது என்று கூறினார்கள்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் இந்த வழக்கை முடித்தாக வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. 4-வது நாளாக நேற்று தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள்.
சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு 29 லட்சம் ஏக்கர் உள்ளது. ஆனால் காவிரி நடுவர் மன்றம் இதில் 5 லட்சம் ஏக்கரை குறைத்து 24 லட்சமாக மதிப்பிட்டது தமிழ்நாட்டுக்கு மிகவும் பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.
29 லட்சம் ஏக்கருக்கான பாசன தேவை, குடிநீருக்கான தேவை ஆகியவற்றை கணக் கில் கொண்டால், தமிழ்நாட்டுக்கு உரிய நியாயமான நீர் பங்கீடு 566 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) ஆகும். காவிரி நடுவர் மன்றம் எங்கள் வாதங் களை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் பயன்பாட்டு உரிமையை 419 டி.எம்.சி.யாக குறைத்து உள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு 566 டி.எம்.சி.யாக உயர்த்தி உத்தரவிட வேண்டும்.
மொத்தம் உள்ள 740 டி.எம்.சி. தண்ணீரை 4 மாநிலங்களும் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
அவர் இவ்வாறு கூறியதும் குறுக்கிட்ட கர்நாடக அரசு வக்கீல் மோகன் கத்தார்க்கி, பங்கீட்டுக்குரிய தண்ணீரின் மொத்த அளவு 740 டி.எம்.சி. என்றால் காவிரி நடுவர் மன்றம் எடுக்காத முடிவை இந்த கோர்ட்டு எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய நியாயமான பங்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், இந்த கோர்ட்டு இதுபற்றிய தீர்ப்பை வெளியிட்டால் பிறகு காவிரி நடுவர் மன்றத்துக்கு எந்த வேலையும் இருக்காது என்று கூறினார்கள்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் இந்த வழக்கை முடித்தாக வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X