search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் ஒருவர் பலி
    X

    காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் ஒருவர் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
    ஜம்மு:

    காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட்-பல்னோயி செக்டாரில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். தாக்குதலில் உயிரிழந்தவர் சிப்பாய் பவான் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.

    இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 285 முறை அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் 228 அத்துமீறல் தான் நடந்தது.
    Next Story
    ×