search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி: கோபாலகிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்றார்
    X

    துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி: கோபாலகிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்றார்

    துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மந்திரி வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். இவர், கோபாலகிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்றார்.
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி முடிவுக்கு வருகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

    இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணியளவில் தொடங்கியது. 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகின. இது 98.21 சதவீதம் ஆகும்.

    பா.ஜ.க., காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள், தேசியவாத காங்கிரசின் ஒரு எம்.பி., பா.ம.க. எம்.பி. ஒருவர் மற்றும் சுயேட்சை எம்.பி.க்கள் இரண்டு பேரும் வாக்களிக்கவில்லை.

    மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே வெங்கையா நாயுடு முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் வெங்கையா நாயுடு, 516 வாக்குகள் பெற்றார். கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்றார். 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. எனவே, 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் துணை ஜனாதிபதியாக விரைவில் பதவி ஏற்க உள்ளார்.
    Next Story
    ×