search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தி வாக்களித்தார்
    X

    துணை ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தி வாக்களித்தார்

    துணை ஜனாதிபதியை பதவியில் அமர்த்த நடைபெற்றுவரும் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    நாட்டின் துணை ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியை வகித்துவரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி முடிவுக்கு வருகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.

    இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரியான வெங்கையா நாயுடு நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காள முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணியளவில் தொடங்கியது. அங்கு மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.கள் ஒவ்வொருவராக பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர். வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

    அதை தொடர்ந்து, பகல் 12 மணியளவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார். அவருடன் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தியும் வந்திருந்தார். எனினும், பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாததால் கோபால கிருஷ்ண காந்தி வாக்களிக்கவில்லை.



    சோனியாவை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மேலிடத் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
    Next Story
    ×