search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
    X

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலாத்தின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் இணைந்து என்கவுண்ட்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாராமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த என்கவுண்ட்டரில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் ஜவானும் காயம் அடைந்ததாக வடக்கு காஷ்மீர் ஐ.ஜி.பி. நிதிஷ் குமார் தெரிவித்தார்.

    சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருந்து தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாராமுல்லா மாவட்டத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதியான அபு துஜானா பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×