என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15 ஓநாய்கள் - ஒரு சிறுவன்: மும்பையில் அரங்கேறிய ஓரினச் சேர்க்கை கொடூரம்
Byமாலை மலர்4 Aug 2017 1:33 PM GMT (Updated: 4 Aug 2017 1:33 PM GMT)
மும்பை அந்தேரி பகுதியில் 15 பேரால் ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் 7 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை:
மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த சிறுவனை (தற்போது வயது 16) கடந்த ஆண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற வகுப்பு தோழன் அவனை தனது செக்ஸ் ஆசைக்கு வடிகாலாக பயன்படுத்தி கொண்டான். மேலும், அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து அதை காட்டி மிரட்டியே, தனது நண்பர்களுக்கும் அவனை விருந்தாக்கினான்.
அந்தேரியில் உள்ள மாநகராட்சி பூங்கா ஒன்றில் சமீபத்தில் அந்த சிறுவனை 15 சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்தி கொண்டனர். இதற்கிடையில், இந்த உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு உடனடியாக 11 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என அந்த சிறுவர்களில் ஒருவன் மிரட்டியுள்ளான். இதனால், கடும் உடல் உபாதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, பாதிக்கப்பட்ட சிறுவனின் சித்தபிரமை பிடித்தவன்போல் இருந்து வந்துள்ளான்.
இந்த விவகாரங்கள் எல்லாம் அவனது நெருங்கிய நண்பர்கள் மூலமாக பெற்றோரின் காதுகளை சென்றடைந்தது. அவர்கள் அளித்த புகார் மற்றும் சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 15 சிறுவர்களின் 7 பேரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்து அரசு இளம்சிறார் காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மனவள ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக அந்தேரி போலீசார் தெரிவித்தனர்.
மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த சிறுவனை (தற்போது வயது 16) கடந்த ஆண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற வகுப்பு தோழன் அவனை தனது செக்ஸ் ஆசைக்கு வடிகாலாக பயன்படுத்தி கொண்டான். மேலும், அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து அதை காட்டி மிரட்டியே, தனது நண்பர்களுக்கும் அவனை விருந்தாக்கினான்.
அந்தேரியில் உள்ள மாநகராட்சி பூங்கா ஒன்றில் சமீபத்தில் அந்த சிறுவனை 15 சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்தி கொண்டனர். இதற்கிடையில், இந்த உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு உடனடியாக 11 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என அந்த சிறுவர்களில் ஒருவன் மிரட்டியுள்ளான். இதனால், கடும் உடல் உபாதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, பாதிக்கப்பட்ட சிறுவனின் சித்தபிரமை பிடித்தவன்போல் இருந்து வந்துள்ளான்.
இந்த விவகாரங்கள் எல்லாம் அவனது நெருங்கிய நண்பர்கள் மூலமாக பெற்றோரின் காதுகளை சென்றடைந்தது. அவர்கள் அளித்த புகார் மற்றும் சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 15 சிறுவர்களின் 7 பேரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்து அரசு இளம்சிறார் காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மனவள ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக அந்தேரி போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X