என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்கம்: திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை
Byமாலை மலர்31 July 2017 5:17 AM GMT (Updated: 31 July 2017 5:17 AM GMT)
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் மாவோயிஸ்டுகளின் செயலாக இருக்கும் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் சமீக காலமாகவே பல்வேறு வன்முறை சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் டார்ஜிலிங் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.
பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்து காரணமாக சில வாரங்களுக்கு முன்பு வன்முறை வெடித்தது. இந்த தொடர் வன்முறை சம்பவங்களால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஷிகுர் ரெஹ்மான் என்ற தலைவர் பராகனாஸ் மாவட்டத்தில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாயத் தலைவரான ரெஹ்மான்(48) தலையில் புல்லெட் பாய்ந்து இறந்துள்ளார்.
இந்த கொலையை அடுத்து, நடுன்ஹாட் மார்க்கெட் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். இது மாவோயிஸ்டுகளின் சதிச் செயலாக இருக்கும் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X