search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா: ஒரே நாளில் மின்னல் தாக்கி 11 பேர் பலி
    X

    ஒடிசா: ஒரே நாளில் மின்னல் தாக்கி 11 பேர் பலி

    ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பட்ராக், பாலாசோர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 11 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் வயல்களில் வேலை செய்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதில் பட்ராக் பகுதியில் 5 பேரும், பாலாசோர், கேந்திரப்பாராவில் தலா 3 பேரும் என மொத்தம் 11 பேர் பலியாகி உள்ளனர்.

    மேலும், மின்னல் தாக்கி படுகாயம் அடைந்த 8 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×