search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம்: பா.ஜ.க.வுக்கு தாவுவதை தடுக்க தீவிரம்
    X

    குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம்: பா.ஜ.க.வுக்கு தாவுவதை தடுக்க தீவிரம்

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்துள்ளார். மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    குஜராத் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் வகேலா ராஜினாமாவை தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வகேலாவுக்கு நெருக்கமானவர்கள்.

    இதனிடையே, பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று முன் தினம் ராஜினாமா செய்த பல்வந்த்சிங் ராஜ்புட் பா.ஜ.க.வின் மூன்றாவது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து, வகேலாவுக்கு ஆதரவான மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்பதால், மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு விமானம் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×