search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி: தாபா உரிமையாளர், மகன் மர்ம நபர்களால் சுட்டு கொலை
    X

    டெல்லி: தாபா உரிமையாளர், மகன் மர்ம நபர்களால் சுட்டு கொலை

    டெல்லியில் நஜஃப்கர் பகுதியில் உள்ள தாபாவின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    டெல்லி:

    டெல்லியில் உள்ள நஜஃப்கர் பகுதியில் மாயான்க் என்பவர் தனது தந்தையுடன் இணைந்து தாபா ஒன்றை நடத்தி வந்தார். இச்சம்பவத்தன்று மாயான்க் வழக்கம் போல் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட கூம்பலில் ஒருவர் ஏர்கூலரை தன் பக்கம் திருப்பி வைத்துள்ளார். அதே சமயம் மற்றொரு வாடிக்கையாளார் கூலரை தன் பக்கம் திருப்ப சொல்லி அங்கு வேலை செய்பவரிடம் கேட்டுள்ளார். உடனே மாயான்க் அனைவருக்கும் காற்றும் வரும்படி கூலரை திருப்பி வைத்துள்ளார்.

    கூலரை திருப்பி வைத்ததால் கோபமடைந்த மர்ம கும்பல் மாயான்க் உடன் சண்டையில் ஈடுபட்டனர். கடையில் உள்ளவர்கள் வந்து தடுத்த போதும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. திடீரென்று அக்கும்பலில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் மாயான்க் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து மர்ம கும்பல் தப்பியோட முயன்ற போது மாயான்கின் தந்தை ஷியாம் தடுக்க முயன்றார். அப்போது அவரையும் மர்ம கும்பல் சுட்டது. இதில் படுகாயமைடைந்த ஷியாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.

    படுகாயமடைந்த மாயான்கிற்கு மருத்துவமனையில்  சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×