என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட நாங்களும் ஆட்சி அமைக்க கோருவோம்: களத்தில் குதித்த லாலு மகன்
Byமாலை மலர்26 July 2017 9:52 PM GMT (Updated: 26 July 2017 9:52 PM GMT)
சட்டசபையில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட தாங்களும் ஆட்சி அமைக்க கோருவோம் என்று லாலு பிரசாத் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
பாட்னா:
பீகாரில் ஆட்சி அமைத்திருந்த மெகா கூட்டணியில் பூசல் வசூலித்ததை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. நேரில் ஆதரவு தெரிவித்தது.
மேலும், பாட்னா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். பா.ஜ.க. சார்பில் ஆளுநருக்கு ஆதரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்ந்இலையில், சட்டசபையில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட தாங்களும் ஆட்சி அமைக்க கோருவோம் என்று லாலு பிரசாத் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி தனது டுவிட்டர் தளத்தில், “ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். பெரிய கட்சியான நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிரடியான திருப்பங்களால், பீகார் அரசியல் இன்று மிகுந்த பரபரப்போடு தான் காணப்படும். யார் அமைக்க போகிறார்கள் என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X