என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவத்திற்கு சொந்தமான 10000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்25 July 2017 3:52 PM GMT (Updated: 25 July 2017 3:52 PM GMT)
நாடு முழுவதும் ராணுவத்திற்கு சொந்தமான நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே பதில் அளித்தார். அவர் பேசுகையில், “பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களில் தோராயமாக 10,220 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு முகமைகளால் இவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிசைவாசிகள் மற்றும் தனிநபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
தனியார் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 205 இந்திய நிறுவனங்களுக்கு 342 தொழிற்சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிட்டுள்ளபடி போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே பதில் அளித்தார். அவர் பேசுகையில், “பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களில் தோராயமாக 10,220 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு முகமைகளால் இவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிசைவாசிகள் மற்றும் தனிநபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
தனியார் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 205 இந்திய நிறுவனங்களுக்கு 342 தொழிற்சாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிட்டுள்ளபடி போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X